download 8 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இனவாதத்தை தூண்டும் சரத் வீரசேகர!

Share
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை விரும்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தான் கோருகின்றனர் என அப்பட்டமான இனவாத பொய்யுரைப்பை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
தமிழர்களை பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தங்களது மறுக்கப்பட்ட தன்னாட்சி உரிமையை வேண்டி 74 ஆண்டுகளாக சமஷ்டி கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்ற அரசியல் கட்சிகளுக்கே வடக்கு கிழக்கில் மாகாணங்களில்  பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இது ஒவ்வொரு தேர்தல்களிலும் நிரூபணமாகியுள்ளது இந்த உண்மையை மறைத்து இனவாதத்தை தூண்டுகிறார் வீரசேகர.
1952,1956,1960 ஆம்  ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் மக்களை நோக்கி சோறா? சமஷ்டியா? வேண்டும் என கேட்ட போது சுதந்திர சமஷ்டியே வேண்டும் என பெரும்பாண்மை மக்கள் ஆணையை வழங்கினர். இதனை இலங்கையின் தேர்தல் வரலாறு தெளிவாக கூறுகிறது.
1977 இல்  நடைபெற்ற தேர்தலில்   வடகிழக்கு மாகாணங்களில்  தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முன் வைத்த  சமஸ்டி கோரிக்கையை தாண்டி தனிநாட்டுக் கோரிக்கைக்கு 99% மக்கள் ஆணை வழங்கினார்கள்  உண்மையாக தனி நாட்டிற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாகவே அமைந்தது.1977  இல்  தமிழர் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.
சுதந்திர தாகத்துடன் தொடர்ந்து  தங்களது அபிலாசையை மக்கள் ஆணை மூலம் வெளிப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை இழிபுபடுத்தி இனவாத தீயை வளர்த்து அதிகாரத்தை பெற நினைக்கும் பித்தலாட்ட நடவடிக்கைகளை சரத் வீரசேகர கைவிட வேண்டும்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...