1 38
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் இரண்டாம் அத்தியாயத்தை நடிக்க முயற்சிக்கும் சஜித்

Share

கோட்டாபயவின் இரண்டாம் அத்தியாயத்தை நடிக்க முயற்சிக்கும் சஜித்

கோட்டாபய ராஜபக்ச காலத்தின் இரண்டாவது அத்தியாயத்தை சஜித் பிரேமதாச நடிக்க முயற்சிக்கிறாரா என்று தான் ஆச்சர்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள(Thalatha Athukorala) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அரசியலில் பொறுமை மிக முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் நடைமுறையில் நிரூபித்துள்ளனர். குறைந்தபட்சம் இப்போதாவது பாடம் கற்க வேண்டும். எனினும் சஜித் பிரேமதாச எப்படியும் தலைவராவதற்கு முயற்சி செய்கிறார் என்று தலதா குறிப்பிட்டார்.

தலைவராவதற்கு இது சரியான நேரமா அல்லது சரியான சூழலா, முயற்சி தோல்வியுற்றால் அதன் பின்விளைவுகள், அத்தகைய முடிவின் பின்விளைவுகளுக்கு அவரால் பொறுப்பேற்க முடியுமா என்று அவர் ஒருபோதும் சிந்திப்பதில்லை.

அதற்கான தலைமைப் பண்பு தன்னிடம் இருக்கிறதா என்று கூட அவர் யோசிப்பதில்லை.அவர் முதிர்ச்சியற்ற முறையில் செயற்கையான போக்கை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க முயலும் போது, அவர் மனதில் எந்த திட்டமும் இல்லை என்றும் தலதா குறிப்பிட்டுள்ளார்.

இது இந்த நாட்டுக்கு புதிதல்ல. இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அத்தியாயத்தை சஜித் பிரேமதாச நிரூபித்துக் காட்டுகிறாரா என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தலதா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Dead Body 1200px 22 12 18
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – நிமோனியா தொற்றால் மரணம் என தகவல்!

யாழ்ப்பாணம், கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின்...

24 66eb36e41bb99 md
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 13 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு: உடற்கூற்றுப் பரிசோதனையில் காரணம் வெளிச்சம்!

யாழ்ப்பாணம் (Jaffna), அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின், பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை...

25 68f95d9f05e86
செய்திகள்அரசியல்இலங்கை

2026 மாகாண சபை தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைப்பு: கட்சிக்குள் ஆழமான கலந்துரையாடல்கள் காரணம்!

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை...

25 68f9483b692e2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தேவை: சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்கவின் ஆவேச உரை!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இவர் நாவலப்பிட்டியில்...