13
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு செல்லுபடியாகாது: விளக்கமளிக்கும் தயாசிறி

Share

ரணிலுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு செல்லுபடியாகாது: விளக்கமளிக்கும் தயாசிறி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesingh) ஆதரவளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தெரிவித்ததை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அந்த ஆதரவு அறிவிப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால, ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு கட்சியின் ஆதரவை அறிவித்துள்ளார்.

எனினும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், மத்திய குழுவில் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்பதால், இந்த ஆதரவை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வெளியிட்டவர்களுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை.

எனவே, கட்சியின் சட்டபூர்வமான செயலாளர் என்ற வகையில், கட்சியை அரசாங்கத்துடன் இணைக்கும் இந்த முயற்சிகளை தாம் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்;திருந்தது.

Share
தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...