14
இலங்கைசெய்திகள்

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

Share

போலி விசேட அதிரடிப்படையினரால் பெருந்தொகை பணமோசடி

புத்தளம் – வென்னப்புவ பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி உட்பட இருவரை கடத்திச்சென்று இரண்டு கோடி ரூபா மற்றும் இரத்தினக்கல்லை கொள்ளையடித்த கும்பலை கண்டுபிடிக்க பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைக்கு நிகரான ஆடைகளை அணிந்திருந்த 8 பேர் அடங்கிய குழு இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் கடந்த 29ஆம் திகதி தனது நண்பருடன் சீதுவ பிரதேசத்திற்கு மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்ய வந்துள்ளார்.

சீதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்று கொண்டிருந்த போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று வந்து மாணிக்க வர்த்தகரையும், அவரது நண்பரையும் வானில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கற்களையும், இரண்டு கோடி ரூபா பணத்தினையும் எடுத்துக்கொண்டு நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சீதுவ பொலிஸில் வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் கொள்ளையர்கள் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அல்ல எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...