6 10
இலங்கைசெய்திகள்

அரிசி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Share

உள்நாட்டு அரிசி வகைகள் அனைத்தினதும் சில்லறை விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பச்சை அரிசியின் விலை 18 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உணவு விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2024-2025 பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நெல் வகைகளினதும் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

விநியோகம் குறைவடைந்துள்ள காரணத்தினால் நாடு அரிசியின் விலை 4 முதல் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 230 முதல் 240 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாட:டு நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை உயர்வடைந்துள்ளதாகவும், சிவப்பு அரிசியின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...