அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் சென்றடைந்த பின்பே பதவி விலகல்!!

Gotabaya Rajapaksa
Share

மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு சென்றடைந்த பின்னர், ஜனாதிபதியின் பிரதிநிதியால் பதவி விலகல் கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முன்னேற்பாடாகவே கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென அந்த வரட்டாரங்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர், சர்வக்கட்சி அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...