5 14
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

Share

இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து அநுரவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து ஜனாதிபதி அநுர இந்திய பிரதமருடன் கலந்துரையாடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், நேற்று(10) யாழ். மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சம்மேளனத் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

நாம் பலமுறை இந்திய தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தும் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் தொடர்ச்சியாக நமது கடற்பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரங்களை அழித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதல் பயணமாக எதிர்வரும் வாரம் இந்தியா செல்ல உள்ளதாக அறிகிறோம்.

இந்திய இழுவைமடி படகுகளினால் எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வருவதை இலங்கை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் நன்கு அறிவார்கள்.

மேலும், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக வலைகள் எடுத்து வரப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்கள் வழங்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தெரிவித்த நிலையிலும் இதுவரை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் உரிய கவனம் எடுத்து தேங்கி கிடக்கும் வலைகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, எமது கடற்றொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினையான இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய பிரச்சினை இந்திய பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசி எமது ஜனாதிபதி அநுர தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....