துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Share

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13.07.2023) மீட்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வலஸ்முல்லை பிரதேசத்திலுள்ள மரக்கறி சந்தையொன்றில் உதவியாளராக பணியாற்றினார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதாளக் குழுக்கள் செயற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...