13 3 2
இலங்கைசெய்திகள்

10 மில்லியன் செலவில் ஊரியான் குளம் புனரமைப்பு!

Share

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் கீழ் 300 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

குறித்த குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்பகுதி என்பவை சேதமடைந்து புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டன.

குளத்தை புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து நீர்ப்பாசன அமைச்சின் ஏற்பாட்டில் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டிய குளங்கள் மற்றும்  நீர்த்தேக்கங்கள் என்பவை புணரமைப்புக்காக தெரிவுசெய்யப்பட்டன.

நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தக் குளம் தெரிவுசெய்யப்பட்டது.

சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் குறித்த வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...