25 688d72a4372e6
இலங்கைசெய்திகள்

நாமல் அவசரமாக வெளிநாடு சென்றது ஏன்..! வெளியான தகவல்

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமீபத்தில் மாலைத்தீவுக்குச் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரைக் கைது செய்ய ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போதிலும், திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நாமல் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

மாலைத்தீவின் முன்னாள் துணைத் ஜனாதிபதி அப்துல்லா ஜிஹாத்தின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே நாமல் சென்றதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அதே விமானத்தில் மாலைத்தீவுக்குச் சென்றார்.

அவர்கள் ஒரே வணிக வகுப்பில் அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமான பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது, இதன் போது ஜனாதிபதியும் நாமலும் குறுகிய நட்பு உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அது நடக்கவில்லை.

நாட்டிற்கு திரும்பிய நாமல், விமான நிலையத்திலிருந்து நேராக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று மனுவை தாக்கல் செய்து பிணை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...