25 688d72a4372e6
இலங்கைசெய்திகள்

நாமல் அவசரமாக வெளிநாடு சென்றது ஏன்..! வெளியான தகவல்

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமீபத்தில் மாலைத்தீவுக்குச் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரைக் கைது செய்ய ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போதிலும், திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நாமல் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

மாலைத்தீவின் முன்னாள் துணைத் ஜனாதிபதி அப்துல்லா ஜிஹாத்தின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே நாமல் சென்றதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அதே விமானத்தில் மாலைத்தீவுக்குச் சென்றார்.

அவர்கள் ஒரே வணிக வகுப்பில் அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமான பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது, இதன் போது ஜனாதிபதியும் நாமலும் குறுகிய நட்பு உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அது நடக்கவில்லை.

நாட்டிற்கு திரும்பிய நாமல், விமான நிலையத்திலிருந்து நேராக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று மனுவை தாக்கல் செய்து பிணை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...