25 688e11fb14f86
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கை பொலிஸ் திணைக்களம் Sri Lanka Police eTraffic App ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை பொதுமக்களில் 13000 பேர் இந்த Sri Lanka Police eTraffic Appயை தரவிறக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களில் அதிகளவான பொது மக்கள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக கொழும்புக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களில் மரணிப்போரின் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படுகிறது.

ஆகையால் அனைவரும் குறித்த Appயை தரவிறக்கம் செய்து நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அதிக வேகமாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் அல்லது சாரதிகளின் காணொளி, புகைப்படம் ஒன்றை எடுத்து இந்த Appயில் தரவேற்றம் செய்தால் பொலிஸ் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...