Anura Kumara Dissanayaka
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார்! – ஜே.வி.பி அறிவிப்பு

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

” அரசாங்கமானது அரச வருமானத்தை அதிகரிப்பதற்கோ, ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவோ, நீண்ட காலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை வருமானம் ஈட்டக் கூடிய அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

உற்பத்திகளை அதிகரிக்கவோ திட்டங்களை தயாரிக்கவோ முறையான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை

அந்த வகையில் வருடக் கணக்கில் தொடர்ந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியிலேயே நாடு தற்போது அகப்பட்டுள்ளது.முறையான பொருளாதார திட்டங்கள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாட்டு மக்கள் ஏழ்மையில் இருந்தாலும் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். இது எப்படி நடந்தது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான

பணத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமையே அதற்கான காரணமாகும். அதன் பாதிப்பையே மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் பலவற்றை தவறானவை என்று இப்போது நிதியமைச்சர் ஏற்றுக்கொள்கின்றார்.இந்த தவறான தீர்மானங்கள் தெரியாமல் நடந்தவையா? இல்லை. தெரிந்தே நடந்துள்ளன. இதனை சிறிய தவறாக கருத முடியாது. இதற்கு ஜனாதிபதியும் அதேபோன்று அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும். நிதியமைச்சரும் தமது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. நாட்டை பொருளாதார ரீதியில் சீர்குலைத்துவிட்டு தவறு நடந்துள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு காரணமான ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...