ranjith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை விரட்ட எந்த தரப்புடனும் இணையத் தயார்! – எதிர்க்கட்சி ஆணித்தரம்

Share

” ராஜபக்ச அரசை விரட்டுவதற்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

மொனறாகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நிச்சயம் முன்வைக்கப்படும். அதன்பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராஜபக்ச ஆட்சியை விரட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ராஜபக்சக்கள் நாட்டைவிட்டு, வெளியேறுவதை தடுக்க மக்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள். கப்ரால் வெளியேறுவதை தடுப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...