சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் நோக்கம் நிறைவேறி வருகிறது!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற நோக்கத்தை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டை பொறுப்பேற்றார்.

அவர் தற்போது தமது பொறுப்பை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை சமையல் எரிவாயு வரிசை இல்லாதொழிக்கப்பட்டு வழமையான நிலை திரும்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கியபோது நாட்டை பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டைப் பொறுப்பேற்பதற்காக அவர் பலகட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எவரும் அதற்கு பதில் வழங்கவில்லை. அதனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் நாட்டை கையளித்துள்ளார் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உர நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரத்தைப் பெற்றுக்ெகாள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...