24 669b499c78cb4
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நகர்வு: ராஜபக்சர்கள் தொடர்பில் எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவுள்ள தற்போதைய அமைச்சரவையில் ராஜபக்சர்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் அவர்களின் தேர்தல் தொடர்பான நிலைப்பாடானது தற்போது வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இட்டுச்சென்றுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடைமுறையானது ராஜபக்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்தும் சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் 22ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை வெளியிட்டதன் பின்னர் அரசியல் அரங்கில் பெரும் கேள்வி நிலைகள் தோன்றியுள்ளன.

இதன் பின்னணியிலேயே இவ்வாறான எச்சரிக்கையை அரசியல் ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

ரணிலின் இந்த நடவடிக்கையானது அவரது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படலாம் என ஒரு சாராரின் கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது.

மேலும், ராஜபக்சர்களின் அரசியல் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், சர்ச்சைக்குரிய மற்றும் கணிக்க முடியாத தேர்தல் நகர்வுக்கு களம் அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...