tamilni 108 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

Share

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரைகளை ஆற்ற உள்ளனர்.

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்றம், தேசிய தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறை ஒன்றின் அடிப்படையில் தேசிய தேர்தல்களை நடத்த முடியுமா என கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டின் கிரிக்கெட் துறையில் நிலவிவரும் நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழு ஒன்றை நியமித்தமை தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...