image 3f6eab056e
அரசியல்இலங்கைசெய்திகள்

முப்படையினர், பொலிஸாரை சந்தித்து நன்றி தெரிவித்தார் ரணில்

Share

பாராளுமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை இன்று நேரில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.

இதன்போது பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்தமைக்காக இராணுவம், பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் ​நேற்றும் (19) இன்றும் (20) பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...