ஹிருணிகா
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களை விட மோசமான சர்வாதிகாரியே ரணில்!!

Share

” ராஜபக்சக்களை விடவும் மிகவும் மோசமான சர்வாதிகாரியே ‘ரணில் ராஜபக்ச’ என்பவர்.” – என்று விளாசித் தள்ளியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக ஹிருணிக்கா பிரேமசந்திர இன்று சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய இன்று முற்பகல் விசாரணைக்கு வந்த ஹிருணிக்கா, சிஐடி அலுவலகத்துக்குள் செல்வதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அவ்வேளையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

” போராட்டக்காரர்களின் கருணையால்தான் ரணில், ஜனாதிபதியானார். அந்த போராட்டம் தொடர்பில் விசாரணை நடத்தவே அழைக்கப்பட்டிருப்பதாக நம்புகின்றேன்.

போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாக நானும் இலக்கு வைக்கப்பட்டுள்ளேன். அமைதியாகவே போராடினோம், எமது போராட்டம் ராஜபக்சக்களுக்கு மட்டுமே தலையிடியாக அமைந்தது.

எது எப்படி இருந்தாலும் ஒடுக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பல்கலைக்கழக மாணவர்கள்கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர். ராஜபக்சக்களைவிடம், மோசமான சர்வாதிகாரியே ரணில், ராஜபக்ச.” – என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kk
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிலாபம் வைத்தியசாலை வெள்ளத்தால் ரூ. 1,200 மில்லியனுக்கு மேல் சேதம்: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலைக்கு (Chilaw General Hospital) ரூ. 1,200...

25 6937fdd054d95
இலங்கைசெய்திகள்

பேரழிவு நிவாரணப் பணிகளில் குளறுபடிகள்: கிராம சேவகர்கள் மீதும் மக்கள் குற்றச்சாட்டு!

அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

1000145332
உலகம்செய்திகள்

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி மீண்டும் கைது: ஈரானிய ஒடுக்குமுறைக்கு சர்வதேசக் கண்டனம்!

2023ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதியை (Narges...

25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...