செய்திகள்இலங்கை

‘மாகாணசபை இந்தியாவின் குழந்தை’ – பிறப்பு சான்றிதழ் வழங்கினார் விமல்!

wimal
Share

“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா விசேடமாக அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. வழமைபோல கோரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்கவில்லை. நாட்டு மக்கள் நிவாரணத்துக்காக காத்திருக்கின்றனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமா அல்லது தேர்தல் முக்கியமா என சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு முன்னுரிமை – முதலிடம் வழங்கப்பட வேண்டும்.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...