WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அராலி மத்தி சிறுவர்களால் கவனவீர்ப்பு போராட்டம்!

Share

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை அராலி மத்தி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் எந்த காலை 9 45 மணியளவில் முன்னெடுத்தனர்.

அராலி மத்தி அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அராலி சமுர்த்தி வங்கி வரை வீதி வலமாக பதாகைகளை ஏந்திய வண்ணம் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விபத்துக்களை தவிர்ப்போம் உயிர்களை காப்போம்! ! அழிக்காதே அழிக்காதே உயிர்களை அழிக்காதே!, வேண்டாம் வேண்டாம் அதிவேகம் வேண்டாம்!, கண்ணீரின் வலியறிந்தும் கவனயீனம் தொடர்வது ஏன்!, மதுபோதையில் வாகனம் ஓடுவதை முற்றாக தவிர்ப்போம்!, பயன்தரும் பயிரை முளையிலே கிள்ளி எறிந்தது ஏன்!, உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அண்மையில் யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில்,இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளம் சிறுவர்களின் உயிர்கள் விபத்துக்களால் பறிபோவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

WhatsApp Image 2022 04 13 at 11.11.47 AM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...