rtjy 213 scaled
இலங்கைசெய்திகள்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

Share

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உத்தேச 18% பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பயனுள்ளதாக இருக்காது.

எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டுக்கு வந்தவுடன் இலங்கை பெற்றோ -இரசாயனங்கள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு செல்லும்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள் என 27,000 இடங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இந்தியா

இந்தியத் தொழிலதிபர் மகனின் ஆடம்பரத் திருமணம் இலங்கையில்: சுற்றுலாத் துறைக்கு ரூ.35 மில்லியன் வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத்...

The earthquake in Uttarkashi occurred around 5km b 1694420274586 1701495114647
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

பங்களாதேஷ் நாட்டில் 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவின்...

articles2FdhDDZcYNvXEcbQ3844QF
உலகம்செய்திகள்

வியட்நாம் வெள்ளத்தில் 55 பேர் பலி: 52 ஆயிரம் வீடுகள் மூழ்கின; 32 இலட்சம் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன!

வியட்நாமில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக...

2025 07 02T141641Z 2 LYNXMPEL610MU RTROPTP 4 HEALTH BIRD FLU
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு: 9 மாதங்களில் பதிவான முதல் மனித

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள்...