rtjy 214 scaled
உலகம்செய்திகள்

காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்

Share

காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள்

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையின்படி தற்போது காசாவில் போர் நிறுத்தப்பட்டுள்ளமையால் அத்தியாவசிய நிவாரண உதவிகள் காசாவுக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து காசாவுக்குள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் நிரம்பிய லொரிகள் சென்ற வண்ணம் இருப்பதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி எகிப்து மற்றும் ஐ.நா. அனுப்பிய 4 எரிபொருள் லொரிகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்துகள் என அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சுமார் 200 லொரிகள் காசாவுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக நடந்துவரும் போரினால் காசா மக்கள் அத்தியாவசியமான உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிப்பதோடு மின்சாரம், இணைய சேவையும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....