rtjy 213 scaled
இலங்கைசெய்திகள்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

Share

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உத்தேச 18% பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பயனுள்ளதாக இருக்காது.

எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டுக்கு வந்தவுடன் இலங்கை பெற்றோ -இரசாயனங்கள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு செல்லும்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள் என 27,000 இடங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...