ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரேரணைகள் மண்கவ்வும்! – ஜோன்ஸ்டன் சூளுரை

Share

பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலம் இல்லாத சஜித் அணியினர் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமானது.

எமது அரசுக்கு எதிரான பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என்றும் தெரிந்தும்கூட பிரதான எதிரணியினர் ஏன் அதனைக் கொண்டுவர முயல்கின்றனர் என்று புரியவில்லை.

என்னதான் நடந்தாலும் பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது. எமது அரசைக் கவிழ்க்க முயல்வோர் முதலில் தமது நிலையை உணரவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...