இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கைக்கு தலைவலியை ஏற்படுத்தும் பிரச்சினைகள்!

United Nations
Share

கொரோனா காரணமாக இவ்வாண்டு, இலங்கை பாரிய பல சவால்களுக்கு முகம் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் ஆகியவை இலங்கைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் உலக பொருளாதார நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரம் தொடர்பான அமைப்பின் அறிக்கையில் சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன.

மேலும் தடுப்பூசியினை 64 சத வீதமான இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...