24 66653544c6527
இலங்கைசெய்திகள்

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

Share

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி(Narendra Modi)யின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe )சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (09) மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி பதவியேற்கிறார், அத்துடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு 3 முறை பிரதமராக பதவி வகிக்கிறார் மோடி.

இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராஷ்டிரபதி பவனில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக டெல்லி அதிக உஷார் நிலையில் இருப்பதால், டெல்லி காவல்துறையின் SWAT மற்றும் NSG இன் கொமாண்டோக்கள் முக்கிய இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...