5 38
இலங்கைசெய்திகள்

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

Share

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு (China) செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில், இன்று (21) செய்தியாளர்களிடம் தெரிவித்த அநுரகுமார, தனது பயணத்துக்கான திகதி குறித்து குறிப்பிடவில்லை என்று வெளிநாட்டு செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பை முடித்த சில நாட்களின் பின்னர் இந்த பயணம் இடம்பெறுகிறது.

இலங்கையின் இருதரப்பு கடனில் பாதிக்கும் மேலானது சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடனாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தநிலையில், அடுத்த மாத நடுப்பகுதியில் தான் சீனாவுக்குச் செல்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார கூறியதாக குறித்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அரச தலைவராக ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணம், 2024 டிசம்பர் 16ஆம் திகதி அன்று இடம்பெற்றது.

பிராந்திய அதிகார மையமான இந்தியா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த சீனாவுடன் கடுமையாகப் போட்டியிடுகிறது.

அத்துடன், இலங்கையில் பீய்ஜிங்கின் வளர்ந்து வரும் பிடியைப் பற்றி புதுடில்லி கவலை கொண்டுள்ளதாகவும் அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....

25 68182df3d5ffd
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தனக்கான குழியைத் தானே தோண்டுகிறது – நாமல் ராஜபக்ஸ சாடல்!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம், தனக்கான அரசியல் குழியைத் தானே...

cefbc010 9b32 11ef a2b4 9bc43832f102.jpg
உலகம்செய்திகள்

நான் தூங்கவில்லை, கண்களை இமைத்தேன்! – உடல்நலம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நலம் மற்றும் ஆற்றல் குறித்து எழும் விமர்சனங்களுக்கு ‘தி...

image 61264ccd5d
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது – சஜித் பிரேமதாச காட்டம்!

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள்...