Untitled
இலங்கைசெய்திகள்

மீண்டும் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு!!

Share

மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் விலையை குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறினார்.

“இந்த மாதம் முதல் நீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கோழிப்பண்ணைத் தொழில் நீர் மற்றும் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த அதிகரிப்புடன், வற் வரி 12% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது. புதிய பாதுகாப்பு வரி 2.5% விதிக்கப்பட்டுள்ளது. இது இறுதி உற்பத்திக்கு சுமார் 7.5% அதிகரிக்கலாம்.

அனைத்து சூழ்நிலைகளிலும், உற்பத்திச் செலவைப் பொறுத்து கோழி இறைச்சியின் விலை உயரும் வாய்ப்புள்ளது. இது குறித்து அமைச்சரிடம் திங்கட்கிழமை விவாதிப்போம். குறிப்பாக முட்டையின் கட்டுப்பாட்டு விலையில் இருந்து விடுபடுவது எப்படி என கலந்துரையாடுவோம்.

தற்போது 50% உற்பத்தியாளர்கள் முட்டையின் கட்டுப்பாட்டு விலையால் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். முட்டையிடும் விலங்குகள் கூட இறைச்சிக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....