rtjy 58 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் கிடுகுப்பிடி

Share

இலங்கைக்கு இந்தியாவின் கிடுகுப்பிடி

நட்பு நாடுகளின் உதவியுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது இலங்கை.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விடயமாகும்.

எனினும் இந்த விஜயம் திடீரென ஒத்திவைக்கப்பட்டமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

செப்டெம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் திடீரென இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அவரின் பயணத்துக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியிருந்தது.

எனினும் இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக இலங்கையில் போராட்டங்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இதேவேளை மற்றுமொரு தரப்பு இந்தியாவால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையே காரணம் என்கிறது.

ஆராய்ச்சிக் கப்பல் என்ற போர்வையில் சீனாவின் குறித்த கப்பல் உளவு பார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளது இந்தியா.

இதற்கான வெளிப்படையான எதிர்ப்புக்கள் இந்திய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இலங்கையில் ராஜ்நாத் சிங்கிற்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு இருப்பினும் சீனாவை பகை இல்லாமல் வைத்துக் கொண்டாலும், இந்தியாவையும் கோபப்படுத்தாமல் செயற்பட வேண்டிய கட்டாயத்திலேயே இலங்கை இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய முக்கியஸ்தரின் இவ்வாறான திடீர் பயண இரத்தானது இந்தியாவின் கோபத்தையும் எச்சரிக்கையையும் வெளிப்படையாக காட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் விதத்திலேயே அமைந்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

என்ற போதும் ராஜபக்சர்கள் ஆட்சி காலத்தில் சீனாவிற்கான ஆதரவு போக்கு இலங்கையில் தொடர்ந்து வந்திருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தற்போது ஆட்சியிலுள்ள இந்த நேரத்திலும் கூட குறித்த நிலைமையே தொடர்ந்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.

இதன்படி பார்க்கும் போது இந்தியாவை நட்பாக வைத்துக் கொள்வதை காட்டிலும் சீனாவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதிலேயே இலங்கை மும்முரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...