rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

Share

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்பு இருக்க வேண்டும் என நான் பல வருடங்களாக கருதி வந்துள்ளேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் என என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...