Provincial Council election 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதமாகும்!

Share

மார்ச் 28ஆம் திகதி முதல் 31 வரை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் தயாராக இருக்காது என்றும்  வாக்குச்சீட்டு அச்சிடும் அட்டவணையை பேணுவதற்கு ஏற்கெனவே தாமதமாகிவிட்டது என்றும் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.

தேர்தல் ஆவணங்களை அச்சிடுவதற்கு தமது திணைக்களம் 500 மில்லியன் ரூபாயைக் கோரியுள்ள போதும் இதுவரை 40 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாகவும் அந்த நிதி அது போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தல் நிதிக்காக திறைசேரியிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கும் நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமைக்குள் தேர்தலுக்காக 500 மில்லியன் ரூபாயும் மாத இறுதிக்குள் மேலும் 600 மில்லியன் ரூபாயும் எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அடுத்த வாரத்தின் நடுப்பகுதிக்குள் நிதி கிடைக்காவிட்டால், தபால் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...