9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

Share

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த சுமார் 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை பொலிஸாருக்கு உதவிவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டுபாய் மற்றும் இந்தியாவில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு மிகவும் அவசியமாக உள்ள 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை புலனாய்வு துறையின் நேர்த்தியான செயற்பாடு காரணமாக, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...