பிரதமர் இல்லம் முன்பு முளைத்தது ‘மைனாகோகம”

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி காலி முகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி பிரதமர் இல்லம் முன்பாகவும் கடந்த சில நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே அங்கு, ‘மைனாகோகம” எனும் பெயரில் புதிய கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.

ஏற்கனவே காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் கிராமம் அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 26 at 1.21.01 PM

#SriLankaNews

Exit mobile version