tamilni 37 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

Share

இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ (Milco) மற்றும் ஹைலண்ட் (Highland) உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் பால் பண்ணைகள் இந்தியாவின் அமுல்(Amul) பால் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மில்கோவை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள போதிலும் ‘ஹைலேண்ட்’ நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அமைச்சரவை முன்மொழிவு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமன்றி உத்தேச திட்டத்தின் கீழ் (NLDB)க்கு சொந்தமான 21 பால் பண்ணைகளில் அதிககம, ரிதியகம, நாரம்மல மற்றும் பொலன்னறுவை பால் பண்ணைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...