இலங்கைசெய்திகள்

பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

4 21
Share

பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக, ‘செனல் 4’ ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளைய தினம் (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய (UK) தொலைக்காட்சியான செனல் 4 உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் தொடர்பாக ஒளிபரப்பிய ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிள்ளையானின் பேச்சாளரான, அஸாத் மௌலானாவின் தகவல்கள் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சுக்கு, அமைப்பு ஒன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பலரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...