இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

pi
Share

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றமையைத் தொடர்ந்து நாட்டில் 15–19 வயதுக்கிடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறு ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வயதெல்லையில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவமனைகளில் மாத்திரம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12–19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குமாறு விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...