tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

Share

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பியதை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிபர்த் தேர்தலின் போது, இறுதித் தறுவாயில் தனது கட்சி வேட்பாளரை அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

அத்துடன், தனது கட்சி கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் இருப்பதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடைபெற மேலும் சில மாதங்கள் இருந்தாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள கட்சி மேலும் தாமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...