24 662f606c4d52d
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Share

ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பு (Colombo) – பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (29.04.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்த ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே என்பவர், தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான அத்துமீறல் குற்றவாளிகள், கொலைகாரர்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டோரே 1988 – 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாகக் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நளின் ஹேவகே தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தைக் கண்டிக்கும் வகையில், புதிய மக்கள் முன்னணி எனும் சிவில் அமைப்பு இன்றைய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டு நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியிருந்தனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....