24 662f606c4d52d
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Share

ஜே.வி.பி தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பு (Colombo) – பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (29.04.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்த ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே என்பவர், தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான அத்துமீறல் குற்றவாளிகள், கொலைகாரர்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டோரே 1988 – 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாகக் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நளின் ஹேவகே தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தைக் கண்டிக்கும் வகையில், புதிய மக்கள் முன்னணி எனும் சிவில் அமைப்பு இன்றைய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டு நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியிருந்தனர்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...