துபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அங்குள்ள நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனப் பலரும் கூறிவருகின்றனர். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஒவ்வொரு நாடும் உணவு கிடைக்கும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews

