போராட்டத்தில் அநுரகுமார
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசை மக்கள் நம்பவில்லை! – அநுர தெரிவிப்பு

Share

“தலை மாறி ஆட்சி அமைத்தாலும் மக்கள் இந்த அரசை நம்பவில்லை. மக்களின் நம்பிக்கையில்லாத ஆட்சியாளரால் இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர முடியாது.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு நாட்டுக்கு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது நமது கடமை. ஆனால், இது நீங்கள் உருவாக்கியது நெருக்கடி.

விவசாயப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எத்தனை தடவை எழுப்பப்பட்டது?

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, விவசாயிகளைத் தூண்டு விடுவதாகக் கூறினீர்கள்.

இப்போது தாம் தவறு இழைத்துவிட்டோம் என்று ஜனாதிபதி புலம்புகின்றார்.

நாட்டுக்கு ஒரு கொடிய பேரழிவை ஏற்படுத்திய ஜனாதிபதியைக் குறை சொல்ல வேண்டுமா?

அவர் விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டார். இப்போது அவர் புலம்புகின்றார்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...