9 34
இலங்கைசெய்திகள்

வரி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Share

வரி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டு திருத்துதல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அந்த சலுகையை மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஹலியகொட புதிய சந்தைக்கு அருகாமையில் நடைபெற்ற இயலும் சிறிலங்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக மருத்துவர்கள் உள்ளிட்ட தொழிற்துறைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இவ்வாறு எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டு முறையில் திருத்தம் செய்யப்படும் எனவும் மக்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...