19 13
இலங்கைசெய்திகள்

வெளியான எச்சரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விளம்பரத்தில், குறித்த வேலையை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் ஒரு நவீன கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வேலையை வட்ஸ்அப் மூலம் இணைக்க முடியும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் பகுதி நேர வேலையின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.17,500 முதல் 46,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் ரூ. 2,000 வைப்பிலிட வேண்டுமென்றும் அதன் பிறகு மோசடியாளர்கள் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த இணைய மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...