19 13
இலங்கைசெய்திகள்

வெளியான எச்சரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விளம்பரத்தில், குறித்த வேலையை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் ஒரு நவீன கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வேலையை வட்ஸ்அப் மூலம் இணைக்க முடியும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் பகுதி நேர வேலையின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.17,500 முதல் 46,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் ரூ. 2,000 வைப்பிலிட வேண்டுமென்றும் அதன் பிறகு மோசடியாளர்கள் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த இணைய மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...