hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

‘பண்டோரா அக்கா’ – நிருபமா ராஜபக்சவுக்கு பெயர் சூட்டினார் ஹிருணிக்கா

Share

‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிருபமா ராஜபக்ச ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட, அவர் பதுக்கிய பணம் 800 வருடங்களுக்கு போதுமானது. கொள்ளையடிப்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் குடும்பமும் அப்படிதான். இங்குள்ள வளங்களை, பணத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

2022 ஆம் ஆண்டுவரும்போது நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அன்றே நான் சொன்னேன். ஆனால் 2021 இலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தற்போது மக்கள் கொடுப்பாவிகளைதான் எரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆட்சியாளர்களையே தாக்குவார்கள் என்பது உறுதி.

நாட்டை சீரழித்த பின்னர் ராஜபக்சக்கள் அமெரிக்கா சென்றுவிடுவார்கள். இது உறுதி. நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ராஜபக்சக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...