21 615e02cd7630e
இலங்கைசெய்திகள்

பண்டோரா  விவகாரம் – நடேசனிடம் விசாரணை

Share

பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, திருக்குமரன் நடேசன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

முன்னாள் பிரதி அமைச்சரான நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், பண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜரானார்.

இன்று முற்பகல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக, ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா அறிவித்திருந்த நிலையில், இன்று திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அண்மையில் வெளியான பண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் திருக்குமரன் நடேசன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....