செய்திகள்இலங்கை

அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகள்! – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

New Project 44
Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனை, தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு கோரி குற்ற விசாரணை பிரிவில் சிறை கைதிகளை பாதுகாக்கும் குழு முறைப்பாடு செய்துள்ளது.

லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் சட்டம் செயற்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய வேண்டும் என கைதிகள் பாதுகாப்பு குழு குறிப்பிட்டிருந்தது.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...