25 683b020c52482
இலங்கைசெய்திகள்

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு: தொற்றால் குழந்தை மரணம்

Share

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரோன் வைரஸ் துணை திரிபுகளான LF.7 மற்றும் XFG ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த கோவிட் மாறுபாடு குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட நோயாளிகள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் முகக் கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் வைரஸின் புதிய வகைகள் அவ்வப்போது பரவுகின்றன, மேலும் இது தொடர்பாக சுகாதாரத் துறை தொடர்ந்து விழிப்புடன் இருப்பதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலி தேசிய மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தையும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.​​

குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

எனினும் ஆசியாவில் தற்போது பரவி வரும் புதிய திரிபாக இந்த வைரஸ் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...