இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி முடிக்காமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமடைகின்றன.

இந்த நிலையில் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்கின்றது.

எனவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதால் பிரச்சினைகள் தோன்றும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...