4 16
இலங்கைசெய்திகள்

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

Share

அரசியலில் ஓய்வு என்ற சொல்லை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி விளக்கம்

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் யாரும் ஓய்வு பெறவில்லை. இறந்த பின்னரே ஓய்வு என்ற நிலை இருந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுட்டிக்காட்டியுள்ளார்

பொதுத்தேர்தலில் போட்டியிடும், தமது கட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான சூழல்களே புரட்சிகள் எனப்படும் என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவே என்று கூறிய அவர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி முகாமினால் சுமத்தப்பட்ட தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே, தமது அரசாங்கத்தினால் நிரூபிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, எதிர்க்கட்சி முகாமில் பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்க்கட்சி முகாம் தங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் என்றும் கூறினார்கள்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...