3 18
இலங்கைசெய்திகள்

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

நாட்டின் இளம் சமூகத்தினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும் மற்றும் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற டிப்ளோமா வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,” இலங்கையின் கல்விப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவு தொடர்பான விடயதானங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்முனைவு பற்றிய கல்வியை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனாலேயே இந்த சமூகம் முன்னேறவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த கல்வி வேலை தேடுவதற்காக அல்ல, வேலை கொடுப்பதாக இருக்க வேண்டும், வேலைகளை உருவாக்க வேண்டும்.

இதுதான் நாட்டுக்கு தேவை, இதை பற்றி பேச வேண்டும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து தொழில்முனைவோராகுங்கள்.

இந்த தொழில்முனைவோர் கருத்தை சமூகமயமாக்க நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன்.

பாரம்பரியத்திற்கு புறம்பாக எப்படி சிந்திப்பது? ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவா? வித்தியாசமாக சிந்திக்கவா? அப்படி நினைப்பதனூடாக இலக்குகளை அடைய முடியுமென நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...