நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன் என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பதவி விலகல் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்ல. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000 ஆம் ஆண்டு அமைச்சு பதவியை வகித்தேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன்.
நான் சட்டத்தரணி, இனி அந்த தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்றவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது.” – என்றார்.
#SrilankaNews
Leave a comment